பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - அன்புடன் மபாஸ்

ஞாயிறு, 11 ஜூலை, 2010

பிரிண்டர் பயன்பாட்டை கண்காணிக்கும் மென்பொருள்

உங்கள் அலுவலகத்தில் அல்லது வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் பிரிண்டரில் cartridge / Toner மாற்றும் பொழுது, 'இவ்வளவு சீக்கிரம் டோனர் தீர்ந்து போக வாய்ப்பே இல்லையே, எப்படி தீர்ந்தது' என்று பலரும் யோசித்திருப்போம். (Cartridge / Toner களின் விலையும் யோசிக்கத் தானே வைக்கிறது. பிரிண்டர் விலை 2000 எனில் அதற்கு கருப்பு மற்றும் கலர் காட்றேஜ்களின் விலை மட்டுமே 1600 ரூ வந்து விடுகிறதே)

இது போன்ற சமயங்களில் அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் கேட்கும் பொழுது, நான் பிரின்ட் எதுவும் எடுக்க வில்லை என்ற பதிலே பெரும்பாலும் வரும்.
நமது கணினியில் எந்த டாக்குமெண்ட், எந்த நேரத்தில், நாளில், எந்த பயனாளரால், எவ்வளவு பிரின்ட் எடுக்கப் பட்டது என்பதை தெளிவாக கண்காணித்து ரிப்போர்ட் தரக் கூடிய ஒரு இலவச மென் பொருள்தான் Printer Usage Monitoring Application.


இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியில் சென்று தரவிறக்கி பயன் பெறுங்கள். இதனை கணினியில் நிறுவும் முறையும் அந்த தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.


சனி, 10 ஜூலை, 2010

சிந்திக்க சில நபிமொழிகள்

1) உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையாக) ஈமான் கொண்டவராகமாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).


2) மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்: புஹாரி (121).


3) ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481).


4) ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல்: புஹாரி (2442).


5) உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்: புஹாரி (2444).


6) ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).


7) ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045).


8) மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம்.


9) இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.


10) வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.


11) ஒருவர் மற்றவர்மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாக இருங்கள் என்று எனக்கு வஹி (இறைசெய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இயான் இப்னு ஹிமார் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.


12) எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி.


13) மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.


14) ''நயவஞ்சகனுடைய அடையாளங்கள் மூன்று. (1)அவன் பேசினால் பொய்யே பேசுவான். (2)அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். (3)அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.


15) பகைமை கொள்பவர்களும், தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி). நூல் : திர்மிதி


16) கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம்.


17) பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;.


18) நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.


19) எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸிர்மா (ரழி). நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.


20) செயல்களில் சிறந்தது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.


21) நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான்.


22) இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி.


23) இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ.


24) தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

iBin - பென் டிரைவ்களுக்கான Recycle Bin

Recycle Bin பற்றி அனைவரும் அறிந்திருப்பர். நாம் Delete செய்யும் கோப்புகளை தற்காலிகமாக இங்கே இருக்கும்.நாம் தவறுதலாக Delete செய்யும் கோப்புகளை இங்கிருந்து எடுத்து விடலாம்.ஆனால் பென் டிரைவ் உபயோகிப்பவர்கள் பென் டிரைவ்ல் உள்ள கோப்புகளை Delete செய்தால் இங்கே இருக்காது. பின் பென் டிரைவ்ல் இருந்து Delete செய்த கோப்புகளை நாம் மீட்டெடுக்க File Recovery மென்பொருள்கள் பயன்படுத்த வேண்டும். iBin என்ற இந்த மென்பொருள் பென் டிரைவ்களுக்கு Recycle Bin போல செயல்படுகிறது.


முதலில் iBin டவுன்லோட் செய்து அதில் உள்ள iBin.exe என்ற கோப்பை உங்கள் பென் டிரைவ்ல் copy செய்து கொள்க.இது வெறும் 216kb அளவு கொண்டதுதான். முதன் முதலில் ஒரு கோப்பை delete செய்யும் போது iBin உங்கள் பென் டிரைவ்ல் உள்ள கோப்பை delete செய்து விடவா? அல்லது iBin Folderல் தற்காலிகமாக வைத்து கொள்ளவா? என கேட்கும்.


Dump into iBin என்பதை கிளிக் செய்தால் உங்கள் பென் டிரைவ்ல் iBin என்ற Folder ஐ உருவாக்கும். இது தான் உங்கள் பென் டிரைவ்களுக்கான Recycle Bin Folder. இது உங்கள் பென் டிரைவ் இன் அளவிலிருந்து 10% எடுத்து கொள்ளும். வேண்டுமென்றால் நாம் அளவை நாம் நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதற்க்கு உங்கள் System Tray ல் உள்ள iBin Icon ஐ கிளிக் செய்க


இதில் Custom Options என்பதை கிளிக் செய்க.இப்பொது கீழ்க்கண்ட Window தோன்றும் .


இதில் சென்று உங்களுக்கு தேவைக்கு ஏற்ப அளவை கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம். மேலும் பல வசதிகளும் உள்ளன. எளிதாக நாம் Delete செய்த கோப்புகளை பார்க்கவோ அல்லது நீக்கவோ Dumping Management என்பதை கிளிக் செய்க .கீழ்க்கண்ட Window தோன்றும் .


இதன் மூலம் கோப்புகளை நீக்கவோ அல்லது மீண்டும் சேமிக்கவோ முடியும் .


இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

வியாழன், 8 ஜூலை, 2010

RapidTyping - உங்கள் தட்டச்சு வேகத்தை கூட்ட

தற்போது கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம்.கணிணியில் நண்பர்களுக்கு ஈமெயில் அனுப்பும் போதோ,அலுவலக விடயமாக தட்டச்சு செய்யும் போது டைப்ரைட்டிங் தெரியவில்லை என்றால் நாம் தட்டச்சு பலகையில் உள்ள ஒவ்வொரு எழுத்துகளையும் பார்த்து பார்த்து தட்டச்சு செய்ய வேண்டும்.தற்போது நமக்கு இருக்கும் வேலைப்பளுவில் தட்டச்சு பழக தனியாக பயிற்சி செல்வது கடினம்.

rapidtyping என்ற எந்த மென்பொருள் நாம் எளிதாக தட்டச்சு பழக மற்றும் தட்டச்சு வேகத்தை கூட்ட உதவுகிறது. இந்த மென்பொருளை நிறுவிய பின் என்ன மொழியில் தட்டச்சு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்க

பின் உங்கள் தட்டச்சு பலகையின் வகையை தேர்வு செய்து கொள்க

அடுத்த படியாக இந்த மென்பொருள் தரும் பயிற்சிகளை செய்வதின் மூலம் எளிதாக தட்டச்சு பழக மற்றும் தட்டச்சு வேகத்தை கூட்ட முடியும்.பயன்படுத்திபாருங்களேன்...

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி.

iColorFolder - உங்கள் Folderக்கு அழகாக கலர் கொடுக்க

இது Windows பயன்படுத்துபவர்களுக்காக ஒரு Softபொருள்.உங்கள் கணினியில் பல கோப்புகள் இருக்கும் அவைகள் பல Folderகளில் நீங்கள் வைத்துருப்பீர்கள்.அவைகள் திரைப்படங்கள் இருக்கும் Folderஆகவோ,புகைப்படங்கள் இருக்கும் Folderஆகவோ அல்லது உங்கள் பர்சனல் கோப்புகள் இருக்கும் Folderஆகவோ இருக்கலாம்.
இந்த மென்பொருளை நிறுவிய பின் உங்கள் folder மீது Right Click செய்து Color Label என்பதை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்த கலரை தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க
இந்த Softபொருளை டவுன்லோட் செய்ய சுட்டி

வெற்று போல்டர்களை நீக்க

நமது கணிணியில் சில நேரங்களில் எந்த கோப்புகளும் இல்லாத வெற்று போல்டர்கள் உருவாகிவிடுவதுண்டு.இவற்றை ஒவ்வொன்றாக தேடி அளிப்பது கடினம்.இதற்கு உதவும் மென்பொருளை பற்றி பார்ப்போம்.
vanityremover என்ற இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை.தரவிறக்கிய பிறகு இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.
படம் 1
உங்களது கணிணியில் வெற்று போல்டர்களை நீக்க வேண்டிய பகுதியை(டிரைவ்) கொடுத்தால் போதும். உதாரணமாக C:\,D:\ .
படம் 2
நீங்கள் கொடுத்த டிரைவில் உள்ள அனைத்து வெற்று போல்டர்களையும் நீக்கி விடும்.இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி.

புதன், 7 ஜூலை, 2010

இலகுவாக நகர்படங்களை உருவாக்க ஓர் மென்பொருள்...

நீங்கள் வழங்கும் படத்திற்கு நீரின் உள்ளிருத்தல்,நீரில் நிழல் விழுதல், மழையில் இருத்தல், பனியில் இருத்தல், நீர்சுருளின் உள்இருத்தல் போன்ற விளைவு வெளியீடுகளை நாம் விரும்பிய விதத்தில் விரும்பிய அளவில் தருகின்றது இம்மென்பொருள்.

இம் மென்பொருளை தரவிறக்க...

எப்படி நகரல்களை உருவாக்குவது..?
மென்பொருளை நிறுவியபின் நகரலாக மாற்றவேண்டிய படத்தினை மென்பொருளில் திறக்கவும்.
படம் 1
பின் தெரிவு கருவியை பயன்படுத்தி நாம் கொடுக்கும் விளைவு வரவேண்டிய பகுதியை தெரிவு செய்து(நான் முழு படத்தையும் தெரிவு செய்துள்ளேன்) வலது சொடுக்கு செய்து தெரிவை முடிக்கவும்.

படம் 2
பின் Rain/Snow and Ripples என்ற கருவியை பயன்படுத்தி விளைவு வகையினை தெரிவு செய்யவும்(படம் 4).
படம் 3
படம் 4
பின் நாம் தெரிவுசெய்த விளைவின் அளவு மற்றும் தெரிவுகளை மாற்ற அவ்விளைவிற்கான அமைப்பினை தெரிவுசெய்து விரும்பியவாறு மாற்றங்களை மேற்கொள்ளலாம்.அமைப்பில் ஊடுருவு அளவு(Transparency) என்பதில் ஊடுருவல் அளவை 90 மேல் கொடுக்கவும். இல்லாவிடில் நீர் விளையு சரியாக தெரியாது.
படம் 5
நாம் கொடுத்த விளைவுகளின் முன்னோட்டத்தை பார்க்க Run Animation(படம் 6) என்பதை சொடுக்கி விளைவின் முன்னோட்டத்தை பார்க்கலாம்.
படம் 6
முன்னோட்டம் சரியெனில் .SWF, .GIF,.AVI போன்ற உங்களுக்கு தேவையான வகையில் சேமித்துக்கொள்ளலாம்.
படம் 7

திங்கள், 5 ஜூலை, 2010

கோப்புகளை கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க விடாமல் தடுக்க

நாம் அவரவர் கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நாம் கணிணியை விட்டு அகன்றிருக்கும் போது யாராவது அதை தெரியாமல் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.



இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.



இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.



தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.



இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.



உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.



தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்க

சனி, 3 ஜூலை, 2010

கூகுளில் தமிழில் தேட இலகுவான வழி.

இணைய அரசனான கூகுள் பல மொழிகளில் தேடுவதற்கு வழியமைத்து தந்துள்ளது. ஆனால் அதன் பயனை பலர் பெருவதில்லை. அதை இயக்கத் தெரியாமையே காரணம்.

இதோ இங்கே எப்படி என்று பார்ப்போம்

http://www.google.lk/அல்லது http://www.google.in/ இதில் எதாவது ஒன்றில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் தமிழ் மொழியை தெரிவு செய்யுங்கள் பின்னர் தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யுங்கள் உதாரணமாக தகவல் தொழில் நுட்பம் என்று தேடுவதற்கு. ( thakaval thozhilnutam ) என்று Type செய்யவும். Thanglish முறையிலே டைப் செய்யவும். முடிவுகள் இவ்வாறு கிடைக்கும்



நீங்கள் விரும்பியதை தேர்வு செய்து பயன் பெறலாம்.

வியாழன், 1 ஜூலை, 2010

கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகத்தையும் இலவசமாக தரவிரக்கலாம்

கணினி துறையில் எந்த மொழி படிக்க வேண்டும் என்றாலும்கடையில் சென்று புத்தகம் தேடவேண்டாம் அதே போல்பல இணையதளங்ககிற்கு சென்றும் தேட வேண்டாம். இந்தஇணையதளத்திற்க்கு சென்று நாம் அனைத்து வகையானபுத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://www.ebookpdf.net
இந்த தளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியது போல்அங்கு இருக்கும் தேடுபொறியில் நமக்கு கணினியில் பிடித்தபுத்தகத்தின் பெயரை கொடுத்து தேட வேண்டியது தான் சிலநிமிடங்களில் நாம் தேடிய புத்தகத்தை எளிதாக காட்டும்உடனடியாக தரவிரக்கிக்கொள்லலாம். ஒவ்வொரு துறைவாரியாகபல தரப்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளது. சில தினங்களுக்குமுன் வரை வெளியான அனைத்து புத்தகங்களையும் நாம்கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம்.